ஆந்திரப்பிரதேசத்தில் தனது 4 வயது மகளை கற்பழித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


ஆந்திரப்பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் மணி குமார் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 4-வயதில் மகள் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். 


மகள் தாயுடன் வசித்து வரும் நிலையில் நேற்று மணி குமார் தனது மகளை சந்திக்க மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் மணி குமார் செய்த செயலை தனது தாயிடம் கூறியுள்ளார். அதை கேட்ட தாய் அதிர்ச்சியடைந்தார்.


இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணி குமார் மீது போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் மணி குமாரை கைது செய்தனர்.