மத்திய பிரதேசம் சட்னா மாவட்டத்தில் சோஹவல் என்ற ஊரை சேர்ந்த முகமது மக்சூட் (32 வயது). கடந்த 18-ம் தேதி சஞ்சய் காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு வயிறு வலிப்பதாக சிகிச்சைக்கு வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர், அவரை பரிசோதித்ததில் அவரின் வயிற்றுக்குள் ருபாய் நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். 


அப்போது, அவர் வயிற்றில் இருந்து 263-நாணயங்கள் மற்றும் 12-பிளேடுகள், 4-ஊசிகள், கண்ணாடி துண்டுகள் போன்ற 5 கிலோ எடைக்கொண்ட பொருட்கள் எடுக்கப்பட்டனர். 


இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில்; இவர் சரியான மன நிலை கொண்டவராக தெரியவில்லை. இவற்றை அவர் யாருக்கும் தெரியாமல் விழுங்கி இருக்கலாம். இவர் இப்போது தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.