ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்டுகள் 2 பேர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பம் மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வீரர்கள், மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர். இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்த நிலையில், இன்று காலை 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள், தோட்டாட்டகள் பறிமுதல் செய்யப்பட்டன.



இன்னும் சில மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால், வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.