மத்தியப் பிரதேசத்தின் உள்ள கோபால்கஞ்ச் கிராமத்தில் மருத்துவமனைக்கு வெளியே பிறந்த குழந்தை ஒன்று நேற்று பிணமாக கிடந்தது. அதனை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த உடலை பார்க்கும் போது  நாயினால் தூக்கி எரியப்பட்ட உடல் போன்று தோற்றம் அளித்தது. அந்த உடலை சோதனை மேற்கொண்ட போது குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது. பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இறந்த குழந்தையின் பெற்றோர்கள் யார் என்பது தெரியவில்லை. குழந்தையின் உடலை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு பின்னர் குழந்தைன் பெற்றோர்கள் யார் என்பது கண்டுபிடிகப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 


இதை தொடர்ந்து, இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.