உத்ரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் பகுதியில், சிறுத்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவயிடத்திற்கு அருகாமையில் இருக்கும் ஊர் பொதுமக்கள், இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.


தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த வனத்துறையினர், பலியான சிறுத்தையினை சடலமாக மீட்டனர்.


சிறுத்தையின் மரணம் தொடர்பான காரணம் தெரிவயவில்லை, வனப்பகுதிக்கு அருகில் சாலை உள்ளதால் விபத்தில் சிக்கி சிறுத்தை இறந்திருக்கலாம் என தெரிகிறது.



இப்பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற சிறுத்தை பலிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த டிச., 5 ஆம் நாள் இதேப்போல் ஒரு 5 மாத சிறுத்தை புலி சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்ககது.


இச்சம்பவம் தொடர்பாக உத்ரகாண்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரனை செய்து வருகின்றனர்.