சித்தூர் மாவட்டத்தின் பாலமநேரு பிரிவில் கங்காவரம் மண்டலத்தின் கீழ் உள்ள மன்னார் நயனிபள்ளி கிராமத்தில் விவசாய வயல்களில் நுழைய முயன்ற காட்டு யானை மின்சாரம் தாக்கி பலியானது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல்களின்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உணவுக்காக விவசாய வயல்களில் நுழைந்துள்ளது. காட்டு விலங்குகள் தனது வயல்களில் நுழைவதைத் தடுக்க அப்பகுதி விவசாயி ஏற்பாடு செய்திருந்த மின்சார வேலி பின்னர் காட்டு விலங்கினை தாக்கியுள்ளது.


இதுகுறித்து தகவல் அறிந்த வன அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மற்றொரு சம்பவத்தில், மாவட்டத்தின் கங்காவரம் மண்டலத்தின் கீழ் முசல்லமடுகு கிராமத்தில் காட்டு யானைகளால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.


காயமடைந்த பெண் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


நிர்மலா என்று அடையாளம் காணப்பட்ட பெண், அருகிலுள்ள வயல்களில் இயற்கையின் அழைப்பின் காரணமாக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது வயல்களுக்கு அருகே சுற்றித் திரிந்திருந்த காட்டு விலங்கு அவரைத் தாக்கியுள்ளது. இருப்பினும், அவர் சிறிய காயங்களுடன் தப்பினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


உள்ளூர்வாசிகள் நிர்மலாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.