தேர்தலின் தோல்வியை கனிவோடு எதிர்கட்சிகள் ஏற்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூற கூடாது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடமுழுவதும் மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதற்கிடையில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் எதிர்கட்சிகள் ஒன்றினைந்து புகார் அளித்துள்ளது. 


இந்நிலையில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர பிரசாத் தெரிவிக்கையில்., "எதிர்கட்சியினர் மோடி ஆட்சியின் வெற்றியை ஏற்க மறுக்கின்றனர். வரும் தேர்தல் முடிவில் எதிர்கட்சியினர் தங்களது தோல்வியை கனிவோடு ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவையில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூற கூடாது" என தெரிவித்துள்ளார்.


வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறும் எதிர்கட்சிகள் மம்தா பானர்ஜி, அமரேந்திர சிங், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் வெற்றியையும் கருத்தில் கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு பாஜக வெற்றி பெற்றது என்றால், இவர்களும் அவ்வாறே வெற்றி பெற்றனரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


மம்தா பானர்ஜி இருமுறை வெற்றி பெற்று முதல்வர் ஆன போது வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எழாத சந்தேகம், அமரேந்திர சிங் வெற்றிப்பெற்ற போது வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எழாத சந்தேகம் தற்போது பாஜக வெற்றியை குறிவைத்து எழுகிறது எனவும் குற்றம்சாட்டினார். 


மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட தேர்தலின் போது எதிர்கட்சிகள் தங்களது தோல்வியை அறிய ஆரம்பித்து விட்டனர்., இதன் காரணமாகவே அன்று முதல் நாடகமாடி வெற்றி பெற விரும்புகின்றனர் என குறிப்பிட்ட ரவி சங்கர் பிரசாத்., ஒருவேளை எதிர்கட்சியினர் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் வாக்குபதிவு இயந்தரங்களில் கோளாறு உள்ளது என ஒப்புக்கொண்டு தங்களது வெற்றியை விட்டு கொடுப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.