வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.... இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வயநாடு மற்றும் பத்தனம் தட்டா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த வகையில் நடிகர்  விஜய் சேதுபதி கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் கேரளாவிற்கு நிதியுதவி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது!