முன்னாள் விமானப்படை தளபதி தியாகியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் நவீன ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லாண்ட் என்ற நிறுவனத்துடன் 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்துக்காக, இந்தியாவை சேர்ந்த சில வி.ஐ.பி.,க் களுக்கு, இத்தாலி நிறுவனம், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சி.பி.ஐ. அமைப்பு 100க்கும் மேற்பட்டோருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை குறித்து சம்மன் அனுப்பி விசாரனை நடத்தியது.  


இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி தியாகி உள்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி., தியாகியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் விமானப்படையின் முன்னாள் தளபதி தியாகி யை சி.பி.ஐ இன்று கைது செய்தது.