தவாங்: அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இன்று காலை விமானப்படை சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்தில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மற்றும் 1 படுகாயம் அடைந்துள்ளார்.


விபத்துக்குள்ளான மில் எம்.ஐ-17 ஹெலிகாப்டரில் ஐந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் 2 இராணுவத் ஜவான்கள் என ஏழு பேர் பயணித்துள்ளனர்.


இன்று காலை 6 மணியளவில் இந்தியா - சீனா எல்லைபகுதியில், ஹெலிகாப்டர் பராமரிப்பு பணியில் இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், 


விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, மேலும் இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.