புது டெல்லி: அசாம் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் ஜோர்காட்டிலிருந்து 12:24 மணிக்கு புறப்பட்டு  புறப்பட்டது. இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றதாக கூறப்படுகிறது. அசாமில் இருந்த புறப்பட்ட விமானம் அருணாச்சல் பிரதேசத்தில் தரையிறங்க வேண்டி இருந்தது. ஆனால் திடிரென அருணாச்சல் பிரதேசத்தின் வான்பகுதியில் விமானம் ரேடார் இணைப்பில் இருந்து காணாமல் போனது. இந்த சம்பவம் சுமார் மதியம் 1 மணிக்கு நடந்துள்ளது. 


இதனையடுத்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் சி 130 ஸ்பேஸ் ஒப்ஸ் விமானங்கள், மாயமான ஏஎன் - 32 விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.