இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா பெண்களுக்கு 6 தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா இந்த மாதம் 18-ம் தேதி முதல் விமானங்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு தனியாக 6 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.


இதைக்குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி கூறியதாவது:- எக்கனாமி வகுப்பில் 3-வது வரிசையிலிருக்கும் 6 இருக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமானப்பயணத்தின்போது பெண்களை சுதந்திரமாக உணர வைப்பது நமது கடமை. தற்போதைய சூழ்நிலையில் ஏராளமான பெண்கள் தனியாக அமெரிக்காவுக்குப் பயணம் செய்கின்றனர். அதனால் அவர்களுக்காக சில இருக்கைகளை நாங்கள் ஒதுக்கீடு செய்திருக்கிறோம் எனக் கூறினார்.