புது டெல்லி: தங்கள் எல்லைக்குள் மட்டும் இருக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாகிஸ்தானை எச்சரித்துள்ளார். காஷ்மீரில் பொதுமக்களைக் சுட்டுக்கொல்லும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து, அவர்களை எல்லைகளைக் கடக்க பாகிஸ்தான் உதவினால், அவர்கள் மீது மேலும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சில ஆண்டுகளுக்கு முன்பு பூஞ்சில் தாக்குதல் நடந்தபோது, ​​முதன்முறையாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி, இந்தியாவின் எல்லைகளை உடைப்பது அவ்வளவு எளிதல்ல என்று இந்தியா உலகுக்கு தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் முதல் முறையாக இந்தியா தனது எல்லைகளின் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை நிரூபித்தனர்.


இரண்டு விஷயங்களுக்காக மனோகர் பாரிக்கரை ஒட்டுமொத்த தேசமும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று அவர் கூறினார். அவர் கோவாவுக்கு அதன் அடையாளத்தைக் கொடுத்தார், இரண்டாவதாக அவர் மூன்று படைகளுக்கு ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் திட்டத்தை கொடுத்தார். 


பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறினார். முன்பு எல்லாம் பயங்கரவாதிகள் நாட்டின் எல்லைகளை கடந்து வந்து நாட்டில் தீவிரவாதத்தை பரப்பினார்கள். ஆனால் தர்ப்பித்து டெல்லி நீதிமன்றத்தின் நடந்த சம்பவத்தை தவிர வேறு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், பூஞ்சில் தாக்குதல் நடந்தபோது, ​​இந்தியாவின் பலம் என்ன என்பது காட்டப்பட்டது என்று கூறினார்.


 



மோடி-பாரிக்கர் ஒரு சகாப்தத்தைத் தொடங்கினார் என்று ஷா கூறினார். பாகிஸ்தான் அதன் கோமாளித்தனத்திலிருந்து விலகவில்லை என்றால், அது மேலும் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.


2016 ல் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்:
2016 செப்டம்பரில் உரி, பதான்கோட் மற்றும் குர்தாஸ்பூரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. யூரி தாக்குதலுக்கு 11 நாட்களுக்குப் பிறகு, 29 செப்டம்பர் 2016 அன்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது.


ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்:
திங்களன்று, ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் "ஜூனியர் கமிஷன்ட் ஆபிசர்" (JCO) உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டு மக்களின் இரத்தத்தையும் கொதிக்க வைத்தது.


காஷ்மீரில் அமைதி குலைந்துள்ளது:
காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் தொடர்ந்து இரத்தம் சிந்துகிறார்கள். சமீபத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சீக்கியர்கள், காஷ்மீர் பண்டிதர்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர். பெயர்களைக் கேட்டு அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த பயங்கரவாத சம்பவங்களால் காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை மோசமாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR