இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதாரமற்ற மற்றும் உந்துதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 'இடைவிடாத சூனிய வேட்டைக்கு' உட்படுத்தப்படுவதாகக் கூறி, இந்தியாவில் தனது அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) கூறியுள்ளது. செவ்வாயன்று (செப்டம்பர் 29) ஒரு அறிக்கையில், அம்னஸ்டி இந்தியா இந்தியாவில் பணியாளர்களை விடுவிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் அனைத்து பிரச்சார மற்றும் ஆராய்ச்சி பணிகளையும் இடைநிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.


ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) கீழ் 2000’ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே அனுமதி பெற்றுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது. இத்தகைய ஒப்புதல் பெற அமைப்பிற்கு தகுதி இல்லை என்று கண்டறியப்பட்டதால் வெளிநாட்டு நிதி பெற அடுத்தடுத்த அரசாங்கங்களால் தடை விதிக்கப்பட்டது. 


இந்தியாவில் மனித உரிமைக்கான பணிகளைத் தொடர்வதாகக் கூறிக்கொண்டு, வெளிநாட்டு நன்கொடைகளால் நிதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்நாட்டு அரசியல் விவாதங்களில் தலையிட இந்தியா அனுமதிக்காது என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்தியது. “இந்த சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும். இது அம்னஸ்டி இன்டர்நேஷனலுக்கும் பொருந்தும்” என்று மேலும் கூறியது.


ALSO READ | வங்கிக் கணக்கு மோசயால் இழந்த முழு பணமும் திருப்பித் தரப்படும்: RBI


“இருப்பினும், FCRA விதிமுறைகளைத் தவிர்ப்பதற்காக, அம்னஸ்டி UK இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட நான்கு நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான பணத்தை அந்நிய நேரடி முதலீடு (FDI) என வகைப்படுத்தியதன் மூலம் அனுப்பியது. கணிசமான அளவு வெளிநாட்டு பணம் அம்னஸ்டி இந்தியாவுக்கு இவ்வாறு அனுப்பியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெற்றுள்ளது. இந்த மோசடி மூலம் பணத்தை மாற்றியமைப்பது தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு முரணானது.” என்று உள்துறை அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


அம்னெஸ்டி இந்தியா, மனித உரிமைகள் பணிக்காக, உள்நாட்டில் நிதி திரட்டுவதற்கான ஒரு தனித்துவமான சர்வதேச அமைப்பாகச் செயல்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் பணிகளை ஆதரித்துள்ளனர். சுமார் 1,00,000 இந்தியர்கள் நிதிப் பங்களிப்புகளை அம்னெஸ்டி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளனர். இந்தப் பங்களிப்புகளுக்கு அரசாங்கம் இப்போது சட்டத்துக்கு எதிரான நிதி திரட்டும் பணமோசடி எனச் சித்தரிக்கிறது என்றும் அம்னெஸ்டி இந்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.


இன்று முன்னதாக, அம்னஸ்டி இன்டர்நேஷனல் அரசாங்கத்தின் சூனிய வேட்டை என மேற்கோளிட்டு தனது இந்தியா நடவடிக்கைகளை நிறுத்தப்போவதாக அறிவித்தது. அரசாங்கம் தனது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டிய மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல், டெல்லி கலவரம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிப்படைத்தன்மையைக் கோரியதன் விளைவாக அரசாங்க நிறுவனங்களால் துன்புறுத்தபடுகிறோம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.