இந்தியா முழுவதும் பால் விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால் விற்பனை விலையை அதிகரித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது, அதில், பாலின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதாவது தற்போது எருமைப்பால் ஒரு பாக்கெட் (500 மி.லி) ரூ.27-க்கு கிடைக்கிறது. அது நாளை முதல் ரூ. 28 ஆக உயர்ந்து விடும். அதேபோல 21 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு பாக்கெட் (500 மி.லி) மாட்டுப் பாலின் விலை 22 ரூபாய் ஆகா உயரும்.


சமீபத்தில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் விலை அதிகரித்தது. பசுவின் பால்  ஒரு கிலோ  ரூ 4.5 எனவும், எருமைப் பால் (கொழுப்பு நிறைந்த) ஒரு கிலோ ரூ 10 எனவும் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.