ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லபட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  காஷ்மீர் மாநில சிறப்பு அதிரடி படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் இணைந்து ராணுவம் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது.


அவர்கள் இந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையும் பதிலடி தந்தது.


பலமணி நேர தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்புபடையினர் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டார். அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து தேடுதல் வேட்டை நிறைவடைந்து உள்ளது என தகவல்கள் தெரிவித்துள்ளன.