பாஜக-வுடனான 9 மாத சேர்க்கைக்கு பின்பு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார் அரவிந்தர் சிங்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஷீலா தீட்சித் தலைமையிலான டெல்லி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் அர்விந்தர் சிங் லவ்லி. 


இவர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில், டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். இதனையடுத்து, அர்விந்தர் சிங்கின் செயலுக்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.


இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இச்செய்தியினை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மகன் உறுதிபடுத்தியுள்ளார்.



 

அரவிந்தர் சிங்-கின் வரவிற்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பதிவின் மூலம் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றன!