புதுடெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு குழுக்களிடையே வன்முறை வெடித்த ஒரு நாளுக்குப் பிறகு, 9 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கில், 307 (கொலை முயற்சி), 120 பி (குற்றச் சதி), 147 (கலவரம்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதங்களின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சனிக்கிழமையன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் (வடமேற்கு) உஷா ரங்னானி பிடிஐயிடம் தெரிவித்தார். 


"இந்த வன்முறையில், மொத்தம் ஒன்பது பேர் (8 காவலர்கள் மற்றும் 1 பொதுமக்கள்) காயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக பிஜேஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு புல்லட் காயம் ஏற்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று காவல்துறை அதிகாரி கூறினார்.


மேலும் படிக்க | Covid Variant XE: கொரோனாவின் புதிய வகை மாறுபாடு இந்தியாவில் அடி எடுத்து வைத்தது 


மேலும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 147, 148, 149, 186, 353, 332, 323, 427, 436, 307, 120B  ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோதல் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மீரட், லக்னோ மற்றும் நொய்டாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறை வெடித்ததை அடுத்து, உத்தரபிரதேசத்தில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீரட், லக்னோ மற்றும் நொய்டாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா மற்றும் சிறப்பு போலீஸ் கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டிபெண்டர் பதக் ஆகியோருடன் அலோசனை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்டம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.


ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் கல் வீச்சுக்குப் பிறகு ஷா, இரு அதிகாரிகளுடனும் தொலைபேசி உரையாடலில் நிலைமையை ஆய்வு செய்தார்.


மேலும் படிக்க | Corona XE Variant: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR