பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில், இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வழக்கின் தீர்ப்பு விவரம்... 


  • சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி. அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடமளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஷியா வக்ஃப் வாரிய முறையீட்டை உச்சநீதிமன்றம், 5-0 என்ற கணக்கில் ஒருமனதாக தள்ளுபடி செய்தது.

  • அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களில் அங்கு இந்து கோயில் இருந்தது என உச்சநீதிமன்றமே கூறினாலும் அதை மட்டுமே வைத்து முடிவெடுத்துவிட முடியாது. மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

  • அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது. நிலத்தை 3-ஆக பிரித்தது தவறு என தலைமை நீதிபதி ரன்சன் கோயாய் குறிப்பிட்டுள்ளார்.

  • ஷியா வக்ஃப் வாரிய முறையீட்டை உச்சநீதிமன்றம், 5-0 என்ற கணக்கில் ஒருமனதாக தள்ளுபடி செய்தது. அயோத்தி வழக்கில் சுன்னி வக்ஃப் வாரியம் மட்டுமே முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

  • பாபர் மசூதி பாபரின் ஜெனரல் மிர் பாக்கியால் கட்டப்பட்டது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

  • அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே தீர்ப்பை அளிக்கிறது, ஒருமித்த கருந்து ஏற்பட்ட நிலையில் ஒரே தீர்ப்பை அளிக்க முடிவு.

  • இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.


---வழக்கின் பின்னணி---


பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்து வரும் ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதன் வரலாற்று தீர்ப்பை அறிவித்துள்ளது. நீதி வரலாற்றில் ஒரு மைல்கல் என சித்தரிக்கப்படும் இத்தீர்ப்பு காலை 10:30 மணிக்கு வழங்கப்பட்டது.
 
நிர்மோஹி அகாரா, உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் ராம்லல்லா விராஜ்மான் இடையேயான 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை பங்கீடுதல் குறித்த வழக்கில் கடந்த 2010 செப்டம்பர் 30, அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அலகாபாத் உத்தரவை மேல்முறையீடு செய்யும் விதமாக இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. 
 
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷண், மற்றும் எஸ் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு அன்றாட விசாரணை அடிப்படையில் விசாரித்து அக்டோபர் மாதம் தனது தீர்ப்பினை முன்பதிவு செய்தது. 
 
68 நாட்கள் நீடித்த வரலாற்று கேசவானந்த பாரதி வழக்கின் பின்னர், 40 நாள் நீடித்த அயோத்தி வழக்கு உச்சநீதிமன்ற வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட விசாரணையாக மாறியது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்க உச்சநீதிமன்றம் முன்வந்துள்ளது.
 
தீர்ப்புக்கு முன்னதாக, நீதிபதி கோகோய் உத்திரபிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோருடன் ஒரு மணி நேர சந்திப்பை நடத்தினார், அவர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததாக தெரிகிறது.
 
இதனிடையே உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து மாவட்ட நீதவான் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஒரு காணொளி சந்திப்பை நடத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களைத் தடுக்குமாறு அறிவுறுத்துகிறார். நிலைமை குறித்து ஒரு தாவலை வைத்திருக்க 24x7 மாஸ்டர் கண்ட்ரோல் அறையை இயக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், நிலைமையை கண்காணிக்க மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். கோயில் நகரத்திலும் லக்னோவிலும் மாநில அரசு ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் என குறிப்பிட்டார்.
 
அதேவேளையில் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளில் எட்டு தற்காலிக சிறைகளை அமைக்க அரசு முயன்றுள்ளது. அயோத்தியில் அனைத்து பாதுகாப்புத் தயாரிப்புகளையும் உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் யோகி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.