பீகார்:  இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையின் அழுகையை நிறுத்த உதட்டில் கம் ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களின் குழந்தை அழுதால், சில தாய்மார்கள் கடுப்பில், வாயில் பிளாஸ்த்ரி வைத்து ஒட்டிவிடுவேன் என அவர்களின் குழந்தையை பயமுறுத்துவார்கள். ஆனால், பீகார் மாநிலத்தின் சாப்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது குழந்தையின் அழுகையை நிறுத்த உதட்டில் கம் ஊற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த விவகாரம் குறித்து குழந்தையின் தந்தை கூறியபோது, "வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது, என் மகனின் வாயில் இருந்து சீழ் வடிந்துள்ளது. இது குறித்து மனைவியிடம் கேட்க, விடாமல், அழுது கொண்டிருந்ததால், உதட்டில் கம் தடவியதாகக் கூறினார்” என்றார். இதையடுத்து, குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.