சர்ச்சைகளுக்குப் பெயர் போனவரான திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரௌபதி குடியரசுத் தலைவர் ஆனால் பாண்டவர்கள் யார்? அதைவிட முக்கியம் கவுரவர்கள் யார்? என்பது தான் என ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா பாஜக தலைவர் கூடூர் நாராயண ரெட்டி, ராம் கோபால் வர்மாவுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 


மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல் : திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல்



தனது பதிவு குறித்து விளக்கமளித்துள்ள ராம் கோபால் வர்மா, மகாபாரதத்தில் திரௌபதி எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். ஆனால் அந்தப் பெயர் மிகவும் அரிதானது என்பதால், அதனுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களை நான் நினைவு கூர்ந்தேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என கூறியுள்ளார்.


அண்மையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் சுதீப் சஞ்சீவ் ஆகியோருக்கு இடையே இந்தி மொழி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிலும் ராம் கோபால் வர்மா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்களின் வெற்றியைப் பார்த்து "பாதுகாப்பற்றவர்களாகவும் பொறாமை கொண்டவர்களாகவும்" இருப்பதாக ராம் கோபால் வர்மா குற்றம் சாட்டினார்.


மேலும் படிக்க | G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பயணம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR