டெல்லி மதுவிலக்குக் கொள்கை வழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, மதுபானத்தின் மொத்தக் கமிஷனை 2 சதவீதத்தில் இருந்து உயர்த்திய ஆம் அத்மி கட்சி, கமிஷனுக்காக, மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “ஆம் ஆத்மி கட்சியும், மணீஷ் சிசோடியாவும் கமிஷன் பெறுவதற்காக மதுபானங்களின் மொத்த கமிஷனை 2 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி உள்ளனர் என்பது டெல்லியின் ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும்" என்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிசோடியா கைது செய்யப்பட்டதைப் பற்றி விளக்கம் அளித்த அவர், கலால் கொள்கை விதிமீறல்களுக்காக கல்வி அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறினார்.



“கல்வி அமைச்சர் ஒருவர் கலால் கொள்கைக்காக கைது செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயம். மனிஷ் சிசோடியா ,குழந்தைகளின் வாழ்க்கையுடன் விளையாடினார்,” என்று பத்ரா கூறினார்.


ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) தாக்கி பேசிய சம்பித் பத்ரா, ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவர்கள், மதுபான ஊழல் விஷயத்தில் இந்த கைதுக்கு அடிப்படைக் காரணமான கலால் கொள்கையை திரும்பப் பெறுவதற்கு ஒரு காரணம் கூட கூறவில்லை என்று கூறினார்.


மேலும் படிக்க | டெல்லி துணை முதல்வர் சிசோடியா கைது... சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது?


“ஒப்பந்தங்களை ஒதுக்க முடியாத தடுப்புப்பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஏன் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன என்று கேட்டோம். தவிர, முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பாக பல கேள்விகள் கேட்டோம். இருப்பினும், ஆம் ஆத்மி இந்தக் கேள்விகளைத் தவிர்த்ததுடன், எந்தப் பதிலும் அளிக்கத் தவறிவிட்டது,” என்று சம்பித் பத்ரா தெரிவித்தார்.


“கடந்த, 1 வருடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது ஆம் ஆத்மி உறுப்பினர் எப்போதாவது கலால் கொள்கையை விளக்குவதற்காக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார்களா? எக்சைஸ் கொள்கையை திடீரென்று ஏன் திரும்பப் பெற்றீர்கள் என்று கேட்டோம். அவர்கள் ஒரு காரணத்தைக் கூட கூறவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.


2014ஆம் ஆண்டுக்கு முந்தைய விஷயத்தைக் குறிப்பிட்ட சம்பித் பத்ரா, கேஜ்ரிவால் அப்பகுதியில் உள்ள மதுக்கடைகள் குறித்த பிரச்சினைகளை எழுப்பியதாகவும், அவர்கள் ஆட்சி அமைத்தவுடன் அவற்றை மூடுவதாக உறுதியளித்ததாகவும் பத்ரா கூறினார்.


மேலும் படிக்க | '7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துங்கள்' - மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்


2014க்கு முன்பு, டெல்லியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் நாங்கள் செல்வோம், பெண்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேள் என்று கெஜ்ரிவால் கூறுவார். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பெண்கள் சொன்னால் மூடப்படும் என்று சொன்ன அர்விந்த் கேஜ்ரிவால், ஆட்சிக்கு வந்த பிறகு, கமிஷனுக்காக கோவில்கள் அருகிலும், பள்ளிகளுக்கு அருகிலும் மதுக்கடைகளை திறந்தது,” என்று குற்றம் சாட்டினார்.


டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர், ஊழல்வாதிகள் என்று அழைக்கும் நபர்களின் வீட்டிற்கு சென்று வருவதாகக் குறிப்பிட்டார். “இதற்கு முன்பு இதே ஆம் ஆத்மி கட்சிதான், இவர்கள் நாட்டிலேயே அதிக ஊழல்வாதிகள் என்று பட்டியலை வெளியிட்டது. இன்று அவர்களின் வீட்டிற்கு செல்கிறார்” என்று கேஜ்ரிவால் என சம்பித் பத்ரா கூறினார்.


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், மணீஷ் சிசோடியா நிரபராதி என்றும், அவரது கைது மோசமான அரசியல் என்றும் கூறியுள்ளார்.


“மனீஷ் அப்பாவி. அவரது கைது ஒரு கேவலமான அரசியல். மணீஷ் கைது செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் பார்க்கிறார்கள். மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள்” என்று கெஜ்ரிவால் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | 2024 ஆம் ஆண்டு பெரிய சவாலாகவும், நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் -காங். தலைவர் கார்கே


அதோபோல, மனீஷ் சிசோடியா அல்லது ஆம் ஆத்மி கட்சி ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ததாக பாஜகவால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது என்று மணிஷ் சிசோடியா கைதுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆனால், மனீஷ் சிசோடியா கைது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியின் ட்வீட் குறித்து பேசும் சம்பித் பத்ரா, பாரதிய ஜனதா கட்சி மற்றும் நாட்டு மக்களால் எழுப்பப்பட்ட ஆறு கேள்விகளுக்கான பதில்களை கேஜ்ரிவால் ட்வீட் செய்ய வேண்டும் என்று பத்ரா கூறினார்.


“அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வளவு ட்வீட் செய்கிறார், அதற்கு பதிலாக பாஜக மற்றும் நாட்டு மக்கள் எழுப்பிய ஆறு கேள்விகளுக்கான பதிலை ட்வீட் செய்யும்படி நீங்கள் (ஊடகங்கள்) அவரிடம் கேட்க வேண்டும்” என்று பத்ரா கூறினார்.


எட்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு சிசோடியாவை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த நிலையில், அதற்கு முன்பு பேசிய டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பயந்து, கட்சியின் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்கிறார் என குற்றம் சாட்டினார்.  


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு பயப்படாத பிரதமர், ஆம் ஆத்மி கட்சிக்கு பயப்படுகிறார் என்றார். "எதிர்காலத்தில் ஆம் ஆத்மி கட்சி மட்டுமே நாட்டை பாஜகவில் இருந்து அகற்றும் என்று அனைவரும் கூறுகின்றனர். மோடி-ஜி ராகுல் காந்திக்கு பயப்படாமல் இருக்கலாம் ஆனால் அவர் பயப்படுவது ஒரு கட்சி என்றால் அது ஆம் ஆத்மி கட்சிதான். அவர்கள் என்னை சிறையில் அடைப்பார்கள், ஆனால் நாங்கள் பயப்படவில்லை. போராடுவோம். இந்த நாட்டின் ஒரே வருங்காலத் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே” என்று சிசோடியா கூறினார்.


மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மனீஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“நான் கெஜ்ரிவால்-ஜியிடம் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் செய்வதைத் தொடந்து செய்யுங்கள். மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடுங்கள்” என்று சிசோடியா கூறினார்.


மேலும் படிக்க | Old Pension Scheme: விரைவில் அரசு தரப்பிலிருந்து சூப்பர் செய்தி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ