டெல்லி பாஜக பிரிவுத் தலைவர் மனோஜ் திவாரி திங்களன்று தனது கட்சி நகர-மாநிலத்தை ஷாஹீன் பாக்-காக (அமைதித் தோட்டமாக) மாற்ற விரும்புகிறது, அதே நேரத்தில் போட்டியாளர்கள் டெல்லி முழுவதையும் ஷாஹீன் பாக் ஆக்குவதற்கு விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "ஒருபுறம், டெல்லியை ஷாஹீன் பாக் ஆக்குவதற்கு மக்கள் தயாராகியுள்ளனர். மறுபுறம் டெல்லியை சாந்தி பாக் ஆக்குவதற்கு விரும்பும் மக்களும் உள்ளனர்" என்று திவாரி கர்கார்டூமாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்., இந்த தேர்தல் டெல்லியின் தலைவிதியை தீர்மானிக்கப்போகிறது. ஒருபுறம், க்ரிபாபிகள் உள்ளன, மறுபுறம், சத்தியத்தின் பாதையில் நடப்பவர்கள் உள்ளனர், என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் ., "ஒருபுறம், அராஜகவாதிகள் இருக்கிறார்கள், மறுபுறம் தேசியவாதிகள் உள்ளனர். ஒருபுறம், நிர்பயாவின் குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்தும் நபர்களும் இருக்கிறார்கள், மறுபுறம், POCSO சட்டத்தை உருவாக்கியவர்களும் உள்ளனர்" என்று மேலும் கூறினார். 


டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெல்லி-காங்கிரஸ்-ஆம் ஆம்தி என மும்முனை போட்டி நடைப்பெற்று வருகிறது. இதனிடையே தீவிரப்பிரச்சாரத்தில் கட்சி தலைவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாஜக-வின் பிரிவுத் தலைவர் மனோஜ் திவாரியின் கருத்து வெளியாகியுள்ளது.


முன்னதாக நேற்றைய தினம் பாஜக-வின் முரளி தரண் அவர்கள் மக்களிடையே பேசுகையில், "டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்" என தெரிவித்தார்.


நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பிப்ரவரி 11 அன்று நடைபெறும். அன்றைய தினம் அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகள் எந்த வகையில் மக்கள் மனதை சென்றடைந்துள்ளது என அறிந்துக்கொள்ளலாம்.