பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்த நடிகை ஜைரா வாசிம் மல்யுத்த வீராங்கனையாக நடித்து இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் அவர் விமான பயணம் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.


அதில், ஏர் விஸ்தாரா விமானம் ஒன்றில் ஜைரா பயணம் மேற்கொண்டு உள்ளார்.  விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்த பொது அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் ஜைராவிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதுபற்றி அழுதுகொண்டே அவர் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.


இந்த சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு மராட்டிய போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், மத்திய அரசும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், நடிகை ஜைராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஏர் விஸ்டாரா நிறுவனம் அளித்த தகவலை வைத்து 39 வயதான விகாஸ் சச்தேவ் என்ற தொழிலதிபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் தொல்லைக்கு ஆளான சாயிரா 18 வயது பூர்த்தியாகதவர் என்பதால் கைது செய்யப்பட்டவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.