மும்பையில் இரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்த சிறுவனை, ரயில்வே காவலர் ஒருவர் சினிமா பாணியில் சென்று காப்பாற்றியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் உள்ள நய்கவுன் என்ற ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் பயணிப்பதற்காக தனது தாயுடன் 7 வயது சிறுவன் வந்திருந்தான்.


ரயில் வந்தவுடன் தாய் ரயிலில் எறிய நிலையில் சிறுவன் தாயை பின்தொடர்ந்து ஏற சென்றுள்ளான் ஆனால், சிறுவன் ஏறுவதற்கு முன்பே மின்சார ரயில் புறப்பட்டது.



இதனால்  அதிர்ச்சியடைந்த சிறுவன் நிலை தடுமாறி நடைமேடையில் இருந்து கீழே விழும்போது,  அங்கு பணியில் இருந்த சுனில் என்ற ரயில்வே காவலர் ஒருவர் சினிமா பாணியில் சென்று காப்பாற்றியுள்ளார். இந்த நிகழ்வு ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது