உத்தரப்பிரதேசம்: கடும் பனிமூட்டம் காரணமாக பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலியானார், பயனிகள் 4 பேர் படுகாயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்று மாசுபாடு காரணமாக வடமாநிலங்களில் மிகவும் மோசமான புகைமூட்டம் நிலவி வருகின்றது. உபி-யை ஒட்டி உள்ள டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.


இந்நிலையில் உபி மாநிலம் பாண்டா பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலியானார். பேருந்தில் பயனித்த பயனிகள் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 



விபத்துக்குள்ளானவர்கள் மீட்கப்பட்டு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.