தன்னை பலாத்காரம் செய்யவந்த காமுகனின் நாக்கை கடித்துவைத்து தப்பிய இளம் பெண்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய்பூரைச் சேர்ந்த 21 வயதான வளரும் மாடளான பெண் ஒருவர் தன்னுடைய நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து, அவர் தனது வீடிற்கு செல்ல கார் ஒன்றை புக் செய்துள்ளார். அந்த காரில், ஓட்டுனர் மற்றும் இன்னொருவரும் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணை காரில் இருந்த இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். இந்நிலையில், ஒருவர் காரில் இருந்த பொம்மை துப்பாக்கியை கையில் காட்டி அப்பெண்ணை மிரட்டியுள்ளார். 


ஆனால், அந்த பெண் சிறிதும் அச்சம் இன்றி அவரை சரமாரியாக தாக்கிவிட்டு, மற்றொருவரின் நாக்கை கடித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து அவர், ஜவஹர் வட்டம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.


இதையடுத்து, இரவு ரோந்துப் பணியில் இருந்த ஜெய்ப்பூர் கிழக்கு DCP ராகுல் ஜெயின் இந்த விஷயத்தை அவசரமாக விசாரிக்கத் தொடங்கினார். மருத்துவமனையில் நாக்கு துண்டிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற்று வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சச்சின் சர்மா (25) என்பவரைக் கண்டுபிடித்தார். வண்டி ஓட்டுநர் சுரேஷ்குமார் வர்மா (30) கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரின் மீது பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்புடைய வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.