ராம் ரஹீம் சிங் தனது வளர்ப்பு மகளுடன் உறவு வைத்துக் கொண்டதாக அவரின் மருமகனே ஒரு பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங் மீது அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சானின் கணவர் விஷ்வாஸ் குப்தா புகார் ஒன்று தெரிவித்துள்ளார். 


சாமியார் அவர் கூறியிருப்பதாவது:- 


ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளராக இருந்தேன். 1999-ம் ஆண்டு ப்ரியங்காவுக்கு ஹனிப்ரீத் இன்சான் என்று பெயர் வைத்தார் ராம் ரஹீம் சிங். அந்த ஆண்டு அவரை எனக்கு திருமணம் செய்து வைத்தார். 2011-ம் ஆண்டு நான் பாபா ராம் ரஹீம் சிங்கை பார்க்க சென்றிருந்தேன். அவர் இருந்த அறையின் கதவை லேசாக திறந்திருந்தது. அது வழியாக பார்த்தபோது என் மனைவியும் அவரும் உறவு வைத்ததை பார்த்தேன். 


எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு பாபா என் மனைவியுடன் இருந்தார். என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார். ஒரு முறை பாபாவை பார்க்க ஹோட்டலுக்கு சென்றபோது என்னை ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு பாபா என் மனைவியுடன் ஒரு அறையில் இரவு பொழுதை கழித்தார் என்றார் அவர். 


வரதட்சணை கேட்டு தன்னை தனது கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்துவதாக ஹனிப்ரீத் ராம் ரஹீமிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் 2009-ம் ஆண்டு ஹனியை தத்தெடுத்துள்ளார்.