அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை கடந்துவிட்டதால், கல்விச் சான்றிதழ்களை மோசடி செய்ததற்காகவும், UPSC தேர்வை வேறு அடையாளத்தின் கீழ் எழுதியதற்காகவும், 2007-ஆம் ஆண்டு IRS அதிகாரி நவ்னீத் குமார் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2007 UPSC தேர்வில் ஆஜராக வேறு அடையாளத்தைப் பயன்படுத்தியதாகவும், கல்வி ஆவணங்களை மோசடி செய்ததாகவும் நிறுவனம் கண்டறிந்ததை அடுத்து, அந்த அதிகாரி புலனாய்வுப் பிரிவு விசாரணையின் கீழ் வந்திருந்தார்.


நவ்னீத் குமார் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். 2007-ஆம் ஆண்டில் UPSC தேர்வில் கலந்து கொள்ள, அவருடைய உண்மை வயதை காட்டிலும் ஐந்து வயது குறைத்து, மற்றொரு நபரின் அடையாளத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது மத்திய விசாரணை நிறுவனம் வழக்கு பதிவு செய்தது.


நவ்னீத் குமார் தற்போது இந்திய அரசின் சுங்க மற்றும் மத்திய கலால் துறையில் பணியாற்றி வருகிறார்.


ராஜேஷ் குமார் சர்மா என்று சந்தேகிக்கப்படும் நவ்னீத் குமார், அவர் 2007-ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தகுதி பெற முன்னாள் அடையாளத்தைப் பயன்படுத்தினார் என கூறப்படுகிறது. ஜூன் 15, 1980-இல் பிறந்த நவ்னீத் 1996-ல் உயர்நிலைப் பள்ளியிலும், முறையே 2003 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இடைநிலை மற்றும் பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றார் என்று நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.


பெட்டியாவில் உள்ள CBSE வாரியத்திலிருந்து சர்மா 1991-ல் 10-ஆம் வகுப்பையும் 1993-ல் 12-ஆம் வகுப்பையும் கடந்துவிட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சரிபார்ப்பின் போது, ​​குமார் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் வேறு நபரின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


குமார் 2003-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிறப்புச் சான்றிதழ் மற்றும் இடைநிலை தேர்வு சான்றிதழ் ஆகியவற்றை இதுவரை துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிலையில் தற்போது, IRS அதிகாரி நவ்னீத் குமார் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.