மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மாணவர்களுடன் கை சுத்திகரிப்பு மற்றும் முகமூடிகளை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதித்துள்ளது. இந்த உத்தரவுடன், தற்போது நடைபெற்று வரும் சிபிஎஸ்இ வகுப்பு 10 மற்றும் 12 வாரிய தேர்வுகளுக்கான புதிய நடவடிக்கைகளையும் வாரியம் கொண்டு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரீட்சை மையங்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாரியத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தின்படி, முன்னெச்சரிக்கை புதிய விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரியத்தால் குறிப்பிடப்பட்ட விரிவான விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


தேர்வு மையங்களுக்கான சிபிஎஸ்இ விதிகள்


தேர்வு எழுத  யாரும் மாணவர்களுக்கு இடையேயான தூரம் 1 மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். 


தேர்வு அறைகள் சிறியதாக இருந்தால், ஒரு அறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும். இதனால் போதுமான தூரம் பராமரிக்கப்படுகிறது.


தேர்வு மையத்தில் முகமூடிகள் மற்றும் சானிடைஜர்கள் எடுத்து செல்ல  மாணவர்களுக்கு அனுமதிக்கப்படும், மேலும் தேர்வு மையத்தில் சானிடைஜர்களை வழங்க வேண்டும்.


சிபிஎஸ்இ தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் அனைத்து அறைகளையும் இடங்களையும் தூரத்தையும் முன்னெச்சரிக்கையாக பராமரிக்க வேண்டும்.


மேற்கூறிய விதிகளுடன், முன்னெச்சரிக்கைகள் குறித்து இன்விஜிலேட்டர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிகுறிகளைப் பற்றி ஆராயவும், தேர்வாளர்களிடையே எந்த தொடர்பும் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் சிபிஎஸ்இ தேர்வு மையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.