சென்னை உத்தண்டியில் விதிமுறைகளை மீறி வீடு கட்டியதாக நடிகர் கமல்ஹாசனுக்கு சிஎம்டிஏ நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 138  நடிகர் நடிகைகள் சென்னை உத்தண்டி கடற்கரையில் விதிமீறி பங்களா கட்டி உள்ளனர்


இந்த இடங்களில், தேவையான அனுமதி பெறாமல் விதியை மீறி பங்களா கட்டி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.


இதில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமது கட்டிடத்துக்கு மாநகராட்சி அனுமதி தரவில்லை என்று ரங்கநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.