காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்பின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. 


பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின் போது இந்திய அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார். 


பங்களாதேஷின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமரான இவர், 2009-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இரண்டாவது முறையாக ஆட்சிக்கு திரும்பினார். மன்மோகன் சிங் 2011-ல் பிரதமராக பங்களாதேஷுக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் சந்திப்பு நடத்தினர். இதன் போது தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.


சனிக்கிழமை வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இந்தியாவும் பங்களாதேஷும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாராட்டியதுடன், கூட்டு கடலோர கண்காணிப்பு முறையை அமைப்பது உட்பட ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.


பிரதம மந்திரிகள் நரேந்திர மோடி மற்றும் ஷேக் ஹசீனா, பரந்த அடிப்படையிலான இருதரப்பு உறவுகளை வலியுறுத்துகையில், நெருக்கமான கடல்சார் பாதுகாப்பு கூட்டாட்சியை வளர்ப்பதற்கான முன்முயற்சிகளை வலியுறுத்தினர், மேலும் கடலோர கண்காணிப்பு ரேடார் அமைப்பை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் குறிப்பிட்டனர்.