182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க மீண்டும் அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் ஏற்கனவே முதல்வராக விஜய் ரூபானி மற்றும் அவரது அமைச்சரவை தங்கள் ராஜினமா கடிதத்தை ஆளுநரிடம் நேற்று ஒப்படைத்தனர். இடைக்கால முதல்வராக விஜய் ரூபானி இருப்பார் என குஜராத் மாநில ஆளுநர் உத்தரவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பாஜக முக்கிய தலைவர்களுடன் ஒருகிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து விஜய் ரூபானி மீண்டும் முதல் அமைச்சராகவும், துணை முதல் அமைச்சராக நிதின் படேல் தேர்வு செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.