டெல்லியில் ஆதித்யா ராஜ் இரண்டு வயது குழந்தை மீது ஆசிட் வீச்சு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியை வசிக்கும் சோனி பிரசாத், ஜம்னா தம்பதியருக்கு ஆதித்யா ராஜ் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது.


கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி முதல் ஆதித்யா ராஜை காணவில்லை. எங்கு தேடியும் அவன் கிடைக்க வில்லை இதனால் பெற்றோர்கள் துக்கத்தில் இருந்துள்ளனர், 


அப்போது அவர்களது வீ்ட்டருகே பாதி முகம் சிதைந்த நிலையில் வலியில் துடிதுடித்தப்படி ஆதித்யா ராஜ் கண்டுபிடிக்கப்பட்டான். உடனடியாக அவனை மருத்துவமனையில் அனுமதித்ததுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர், அப்போது தான் ஆதித்யா ராஜின் அம்மாவான சோனி பிரசாத், கோவிந்த ராம் தாஸ் என்ற வாலிபர் காதலித்தது தெரியவந்தது. கோவிந்த ராம் தாஸ் என்னை  திருமணம் செய்துகொள், உனது கணவன் மற்றும் குழந்தையை பிரிந்து விடு என சோனி பிரசாத் மிரட்டி உள்ளான்.


இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜம்னா மற்றும் சோனி பிரசாத் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர், ஆனால் தொடர்ந்து வற்புறுத்தி வந்த கோவிந்த ராம் தாஸ், ஆதித்யா ராஜை கடத்தி கொண்டு சென்று முகத்தில் ஆசிட் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. 


தன் மகனின் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. எனது மகன் படும் துன்பத்தை பார்த்து தாங்க முடியாமல் தவித்து வருவதாக சோனி பிரசாத் தெரிவித்துள்ளார்.