டெல்லியில் தனது ஐந்து வயது மகனை பெற்ற தாயே சுவற்றில் எரிந்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.......  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி கபஷேரா பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் தனது கணவரான சூர்ய பிரதாப் சிங்கை பிரிந்து கடந்த 3 வருடங்களாக வசித்து வசித்து வந்துள்ளார். இவருக்கு யுவான் சிங் என்று 5 வயதில் ஒரு மகன் உண்டு. யுவான் சிங்கை தன்னுடனே வளர்ந்து வந்துள்ளார் ராணி. இதனிடையே நரேந்திர குமார் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நரேந்திர குமாரும் ராணியின் வீட்டிலேயே தங்கியதாகவும் அக்கம்பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன் சிறுவன் யுவான் சிங் வீட்டு கழிவறையில் கீழே விழுந்து மயக்கம் அடைந்துவிட்டதாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதே சமயம் யுவான் சிங்கின் தந்தையான சூர்ய பிரதாப், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது' குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.  


இதையடுத்து, சிறுவனின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவனின் உடலில் பல காயங்கள் இருந்ததும், அடித்தது கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ராணி, நரேந்திர குமார் ஆகியார் இணைந்து குழந்தையை கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் கைது செய்யதுள்ளனர். 


சிறுவனின் தலையை பலமுறை சுவற்றில் மோதச் செய்த அவர்கள் அதன்மூலம் சிறுவனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. பெற்ற குழந்தையை தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.