டெல்லியில் சரக்கு லாரி உரிமையாளருக்கு, சாலை விதிகளை மீறியதற்காக இரண்டு லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


இந்நிலையில், டெல்லியில் சரக்கு லாரி உரிமையாளருக்கு, சாலை விதிகளை மீறியதற்காக இரண்டு லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொகை பெரியது என்பதால் ரோகிணி நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்துமாறு டெல்லி சாலைப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். தேவையான ஆவணங்களை தாக்கல் செய்தால் அபராதத் தொகை குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


முபாராகா சதுக்கம் அருகே வாகன சோதனையின் போது இந்த சரக்கு லாரி சிக்கியது. ராம் கிருஷ்ணன் என்ற ஓட்டுனர் சரக்கு லாரியை ஓட்டி வந்தார். அவரிடம் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான இதர ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. 


இதையடுத்து, அவருக்கு சரக்கு லாரியில் அதிக சுமை ஏற்றியதற்காக ரூ. 20,000 + ரூ. 36,000 (ஒவ்வொரு கூடுதல் டன்னிற்கும் ரூ .2,000. டிரக்கில் 18 கூடுதல் டன்கள் இருந்தன), ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ. 5,000, பதிவு சான்றிதழ் இல்லாததற்கு ரூ. 10,000, உடற்பயிற்சி இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ. 10,000, அனுமதி மீறலுக்காக ரூ. 10,000, வாகன காப்பீடு இல்லாததற்கு ரூ. 4,000, கட்டுப்பாட்டு சான்றிதழின் கீழ் மாசுபாடு ரூ. 10,000, கண்டுபிடிக்கப்படாத கட்டுமானப் பொருள் ஏற்றியதற்காக ரூ. 20,000 மற்றும் சீட் பெல்ட் அணியததற்கு ரூ.1,000 என மொத்தம் அவருக்கு இரண்டு லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.