தேசிய தலைநகரம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளான நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் காஜியாபாத் ஆகியவற்றில் உள்ள மாசுபாடு செவ்வாயன்று `மிகவும் மோசமான 'பிரிவில் நீடித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்றின் தரக் குறியீடு (AQI) 392-ஆக உயர்ந்துள்ளது என்று மத்தியில் இயங்கும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி (SAFAR) நிறுவனம் தெரிவித்துள்ளது.


டெல்லியின் சாந்தினி சௌக்கில் AQI மிக உயர்ந்து 673-ஆக பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்நுத பூசா 400, விமான நிலையம் (T3) மற்றும் மதுரா சாலை 399, IIT டெல்லி மற்றும் திர்பூர் 395, டெல்லி பல்கலைக்கழகம் (DU) 393, லோதி சாலை 384 மற்றும் அயனகர் 374 என பதிவுசெய்துள்ளது. டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் AQI 535-ஆகவும், குருகிராமில் 384-ஆகவும் பதிவாகியுள்ளது. முன்னதாக., காற்றின் வேகம் அதிகரிப்பதால் புதன்கிழமை காற்றின் தரம் சற்று மேம்படும் என்று SAFAR குறிப்பிட்டிருந்தது., எனினும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை.


"ஆண்டு முழுவதும், டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை நீடிக்கிறது, ஆனால் தற்போது தீபாவளி கொண்டாட்டத்தை அடுத்து மாசுபாடு நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


கடந்த இரு தினங்களில் டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் `கடுமையான` வகையைத் தொட்டது. SAFAR-ன் கூற்றுப்படி, ஹரியானா மற்றும் பஞ்சாபில் ஏற்படும் புகைமூட்டங்கள் மாசுபாடு நிலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. மேலும் போக்குவரத்து நிலை காற்றின் திசை புளூம் போக்குவரத்துக்கு (வடக்கு-மேற்கு) சாதகமானதாக இருப்பதால், காற்றின் தரம் வரும் நாட்களில் சற்று மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


"Biomass தொடர்பான பங்களிப்பு அக்டோபர் 29-ஆம் தேதி இந்த ஆண்டின் உச்ச மதிப்பை (~ 25 சதவீதம்) எட்டியது. இன்றைய தினம் இது மிக மோசமான வகைக்கு மேம்படும் என்று AQI கணித்துள்ளது மற்றும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் காற்றின் வேகத்தில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமா மிகவும் மோசமான வகையில் இருந்து நடுத்தர வகைக்கு மேம்படும் என AQI தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


"செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 21 வரை பதிவுகளைப் பார்த்தால், பஞ்சாபில் தீ விபத்துக்கள் உயர்வு கண்டுள்ளது. குறித்த இப்பகுதிகளில் இதுவரை 3466 தீ விபத்துக்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018-ஆம் ஆண்டில், அக்டோபர் 21 வரை இது 2575-ஆக இருந்தது" என்று PRSC-யின் தலைமை ACM பிரிவின் அனில் சூத் லூதியானாவில் ANI உடன் பேசும்போது கூறினார். 736 வழக்குகளுடன் தீ விபத்துக்கள் பட்டியலில் டரான்டாரா முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமிர்தசரஸ் 597 வழக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், பாட்டியாலா 439 புகாருடன் அடுத்த இடத்திலும் உள்ளது. ஃபெரோசாபாப்பூரில், சுமார் 311 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன, குருதாஸ்பூரில் இதுபோன்ற 239 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 


இதனிடையே காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் Odd-Even திட்டத்தை 2019 நவம்பர் 4 முதல் 15 வரை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.