தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு எதிரான 2 கொலை வழக்குகள் மீதான விசாரணை இன்று பஞ்ச்குலா கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.  இதனை முன்னிட்டு, பஞ்ச்குலா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஹரியாணாவில் பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி, தேரா சச்சா சௌதா அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, பஞ்ச்குலா மாவட்ட கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.


இந்த இரு வழக்குகளிலும் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹிம் சிங், காணொலி முறை மூலமாக கோர்ட்டில் ஆஜராகி தன் தரப்பு வாதத்தை முன்வைக்கவுள்ளார். 


முன்னதாக, குர்மீத் ராம் ரஹிம் சிங் மீதான பலாத்கார வழக்கில் ராம் ரஹீமை பஞ்ச்குலா நீதிமன்றம் கடந்த மாதம் 25-ம் தேதி குற்றவாளியாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவரது ஆதரவாளர்கள் கலவரங்களில் ஈடுபட்டனர். இந்த கலவரங்களில் 40 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.