கேரளாவில் மத்திய பாதுகாப்புப் படைவீரர்கள் இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 400 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளிபுரம் பகுதியில் உள்ள முகாமில் தங்கியிருந்த 400 சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று இரவு உணவு சாப்பிட்டனர். இதைத் தொடர்ந்து வீரர்கள் தங்களுக்கு வயிறு வலிப்பதாகவும், வாந்தி வருவதாகவும் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். 


கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட 109 வீரர்கள் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.