நாக்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தில் இரண்டு பணிப் பெண்களுக்கு இளம் தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

23-வயதான ஆகாஷ் குப்தா என்ற அந்த தொழிலதிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த பணிப்பெண்கள் கடிதம் மூலம் கேப்டனுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.


புகாரை பெற்றுக் கொண்ட கேப்டன் கோபால் சிங், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 


மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நாக்பூரில் உள்ள சோனெகான் போலீசாருக்கு புகாரினை அனுப்பினார். சொனெகான் போலீசார் தொழிலதிபர் ஆகாஷ் குப்தாவை கைது செய்தனர்.