புது டெல்லி: கோவிட் -19 தொற்றுநோய்ய்க்கு எதிரான போராட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கோடி ரூபாய் பங்களிப்பு செய்துள்ளார்.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எம்.பி.எல்.ஏ.டி நிதியில் இருந்து இந்த உதவியை செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



உலகளவில் 2 நாட்களுக்குள் 1,00,000 புதிய கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. AFP இன் கூற்றுப்படி, மார்ச் 26 அன்று 5,00,000 உலகளாவிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. மார்ச் 28 க்குள், உலகளவில் 6,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்குள், உலகில் 1,00,000 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா வைரஸ் காரணமாக முதல் மரணம் குறித்து தெலுங்கானாவில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் குளோபல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டதாக தெலுங்கானா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6 புதிய வழக்குகள் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் இ.ராஜேந்தர் தெரிவித்தார்.


உலகளாவிய கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சீனா  போன்ற நாடுகளில் அதிக இறப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இந்த நோயால் 1,30,000 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹானில் உள்ள ஒரு சந்தையிலிருந்து இந்த தொற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.