புதுடெல்லி: டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 15 குழந்தைகள் அட்மிட் செய்து வைத்திருந்த வார்டில் அதிகாலை 3.35 மணியளவில் தீ பற்றி எரிந்தது. ஆறு முதல் ஏழு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக மேலதிகாரிகள் கூறியுள்ளனர்.