புதுடெல்லி: குஜராத்தின் சூரத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை அபாயகரமான தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. தீ மிக வேகமாகா பரவி வருகிறது. 18 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஜவுளி தொழிற்சாலை சூரத்தின் பாண்டேசரா பகுதியில் உள்ளது. இப்பகுதியில் மேலும் பல தொழிற்சாலைகள் இருப்பதால், அங்கும் தீ பரவும் அபாயம் உள்ளது என்பதால், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுவரை கிடைத்த தகவல்களின்படி, சூரத்தின் பாண்டேசரா பகுதியில் அமைந்துள்ள இந்த ஜவுளி தொழிற்சாலை இன்று காலை திடிரென தீ பிடித்தது என்றும், அதற்க்கான காரணம் இதுவரையும் தெரியவில்லை. இதுக்குறித்து அங்கு உள்ள காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.