உத்திரபிரதேசத்தில் கார் ஒன்று டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பிய குடும்பத்தாரின் கார், எதிரே வந்த டேங்கர் லாரியின் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 


இந்த விபத்து குறித்து கோரக்பூர் காவல்துறை அதிகாரி RP சிங் தெரிவிக்கையில்... இந்த விபத்தானது கோரக்பூர்- சோனாலி நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சாபுதீன் நிஷா(45), மொகமத் ஹுசைன் (50), சபினா (50), நஜ்ரூன் நிஷா (23) மற்றும் நஜ்பூன் நிஷா(40) என்னும் 5 பேர் சம்பவயிடத்திலேயே பலியானதாக தெரிவித்துள்ளார்.


படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேரும் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மஹாராஜ் கன்ச் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் கிச்சோசா ஷெரிப் பகுதியில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பின்னர் வீடு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.