பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.


இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.


பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால், இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அரசு வெளியிட்ட அறிக்கையின்படி 56 ஆக இருந்த பலியானவர்களின் எண்ணிக்கை, தற்போது 72 ஆக உயர்ந்துள்ளது.


மேலும், அம்மாநிலத்தைச் சேர்ந்த 14 மாவட்டங்களில் இருக்கும் 73.44 லட்சம் மக்கள் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.