ஜம்மு: எல்லையில் இரு பயங்கரவாத ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி செக்டாரில் பயங்கரவாத ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிருஷ்ணா காதி செக்டாரில் பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதல் நடைபெற்ற இரு பயங்கரவாத ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதலை கொடுத்தனர். எல்லையில் நான்கு பகுதிகள் பாகிஸ்தானின் தாக்குதலை இன்று எதிர்க்கொண்டுள்ளது.


பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் 8:30 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 2 நாட்களாக எந்தஒரு அசம்பாவித நிகழ்வும் நேராத நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் குர் சேவக் சிங் உயிரிழந்தார்.