ஜம்மு காஷ்மீர் ஷோபியான் பகுதியில் உள்ள நேப்கம் கிராமத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுகொள்ளபட்டனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு&காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள நேப்கம் கிராம பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் நேப்கம் கிராமத்தை சுற்றி வளைத்தனர். 


அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேலும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 



மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.