பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பெண்கள் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரை மாணவிகள் அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் அரசு பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவி ஒருவருக்கு இரட்டை அர்த்தம் தரும் வகையில் ஆபாசமான செய்திகள் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து அக்கலூரி மாணவிகள் ஒன்று திரண்ட பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் வைத்தே பேராசிரியரை அடித்து இழுத்து கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு இழுத்து சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில உயர்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.