பனாஜி: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், திங்களன்று, சமூக தொலைதூர விதிமுறைகள் மற்றும் முகமூடிகளைப் பற்றி அறிந்து கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் மக்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இதை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே மக்கள் முகமூடி அணிவதற்கும் சமூக தூரத்தை பராமரிப்பதற்கும் பழக ஆரம்பிக்க வேண்டும். இது இரண்டு ஆண்டுகளுக்கு தொடரக்கூடும் என்று சாவந்த் கூறினார்.


தற்போது, கோவாவில் ஒரு கோவிட் -19 நோய் தொற்றுக்கூட இல்லை.


அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருவதால், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கான எல்லைகளை சீல் வைப்பதை தொடர விரும்புவதாக சாவந்த் கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் கோவாவிற்கு வெளியில் இருந்து மக்களை அனுமதிக்கவில்லை. கோவிட் -19 மூலம் பாதித்த நேர்மறை நபர்கள் மாநிலத்திற்கு வருவது எங்களுக்கு கவலை ஏற்படுத்தி உள்ளது. நமது அண்டை மாநிலங்களில், நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது" என்று சாவந்த் கூறினார்.


மத்திய அரசின் வழிகாட்டுதல்களால் அனுமதிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் கூறினார்.