இந்திய கடற்படை புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் மே 31ம் தேதி அன்று முடிவடைகிறது.


இந்நிலையில் புதிய தளபதியாக துணை அட்மிரல் கரம்பிர் சிங் நியமனம் செய்யப்பட உள்ளார் என்பதை ராணுவத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். துணை அட்மிரல் சிங், தற்போது கடற்படையின் துணைத் தளபதியாக செயல்பட்டு வருகிறார்.


1980ம் ஆண்டு ஜூலை மாதம், கடற்படையில் தனது சேவையை ஆரம்பித்தார் சிங். 1982ம் ஆண்டு, ஹெலிகாப்ட்டர் பைலட்டாக அவர் பதவி உயர்வு பெற்றார்.